அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோட்டைப்பட்டிணம் கிளை வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது.கிளை தொடர்புக்கு சகோ.சாலிகு (கிளை தலைவர்) - 99650 88902,சகோ.செய்யது (ஜெகதை) - 9942449265 இ மெயில் - kottaipatinam@hotmail.com

----------------------------------------

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக பொதுக் குழு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 29,2011) கிழக்கு தாம்பரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்றது. 

முன்னதாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) அன்று தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னை மன்னடியில் உள்ள ஆயிஷா மகாலில் நடைபெற்றது. செயற்குழுக் கூட்டத்திற்கு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமை தாங்கினார். சவுதி கிழக்கு மண்டல தமுமுகவைச் சேர்ந்த மவ்வவி ஆற்றங்கரை அலாவுதீன் பாகவியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் செயற்குழு தொடங்கியது. செயற்பாடு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை  சமர்பிக்கப்பட்ட பிறகு தலைமைக் கழகத் தேர்தல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்களில்  50 பேர் பங்குக் கொண்டு தமது கருத்தை பதிவுச் செய்தார்கள். 

விவாதத்தில் பங்குக் கொண்ட 46 மாவட்ட நிர்வாகிகளில் 40 பேர் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் அதைத் தொடர்ந்து உள்ளாட்சி மன்றத் தேர்தல் முதலியவற்றை சந்திக்க உள்ளதால் தலைமை நிர்வாகிகள் தேர்தலை ஒத்திவைத்து  தற்போதைய தலைமை நிர்வாகமே நீடிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். இவர்களில் பலர் ஓர் ஆண்டுக்கு தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும், சிலர் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும் இதற்காக அமைப்பு நிர்ணயச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தனர். 

விவாதத்தின் இறுதியில் அமைப்பு நிர்ணயச் சட்டத்தை திருத்தாமல் அமைப்பு  நிர்ணயச் சட்டம் அவசர நிலையில் முடிவெடுக்க அதிகாரம் வழங்கும் விதிமுறைப்படி ஓர் ஆண்டுக் காலம் தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு அளிக்கப்பட வேண்டுமென்று செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு முன்வைப்பது என்றும் முடிவுச் செய்யப்பட்டது.

தமுமுக தலைமை பொதுக் குழுக் கூட்டம் மறுநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி அலாவுதீன் பாகவியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் பொதுக் குழு தொடங்கியது. பின்னர் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி சென்ற 2009 ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற பொதுக் குழு முதல் இந்த பொதுக் குழு வரையிலான செயற்பாட்டு அறிக்கையை சமர்பித்தார். பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். இதன் பின் பொதுக்குழு தீர்மானங்களை தலைமை கழக நிர்வாகிகள் முன்மொழிந்தார்கள். தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமைப்புத் தேர்தல் தொடர்பாக செயற்குழு தீர்மானத்தை முன்மொழிந்து பேச சில செயற்குழு உறுப்பினர்கள் அனுமதி பெற்று பேசினார்கள். 

தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை அக்பர், வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் அஸ்லம் பாஷா, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சலீமுல்லாஹ் கான், நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் மைதீன் சேட் கான், மதுரை மாவட்டச் செயலாளர் மதுரை மைதீன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் ஜபருல்லாஹ், வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமுமுக சகோதரர்கள் சார்பாக சவுதி கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் இது முக்கியமான காலக்கட்டம். சட்டமன்றத் தேர்தலையும் உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் எதிர்நோக்கும் இந்த சூழலில் தற்போதைய தலைமை நிர்வாக குழு தொடர்வது தான் அமைப்பு மற்றும் சமுதாய நலனுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே ஓர் ஆண்டுக் காலத்திற்கு தற்போதைய தலைமை நிர்வாகிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற செயற்குழுவின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென்று பொதுக் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்கள். 

செயற்குழு முன்வைத்துள்ள தீர்மானத்திற்கு ஏகமனதாக பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் ஜனவரி 2012 வரை தலைமை நிர்வாகிகளாக நீடிப்பார்கள். 

இதே நாளில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று அக்கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது நன்றியுரை ஆற்றினார்.

மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த இரு பொதுக்குழுக்களும் நடைபெற்றன. பல்வேறு மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்களை வரவேற்கும் வண்ணமையமான வரவேற்பு பலகைகள் காஞ்சி தெற்கு மாவட்டத்தினரால் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாநில மாநாடு போல் 3 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுக்குழு திடல் மக்களால் நிரம்பி வழிந்தது. பொதுக்குழு திடலில் தொழுகை இடம், ஒழுச் செய்யும் வசதி, கழிப்பறை வசதி முதலியவை கச்சிதமாக செய்யப்பட்டிருந்தன. பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி மற்றும் செயலாளர் பி.எஸ். ஹமீது ஆகியோர் பொதுக் குழு ஏற்பாடு பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் எம். யாகூப், மாவட்ட செயலாளர்கள் யுசுப் சுலைமான். காமராஜபுரம் ஹைதர் மற்றும் மாவட்ட பொருளாளர் சைபுதீன் ஆகியோர் வழிகாட்டலில் மாவட்ட சகோதரர்கள் மிக சிறப்பான முறையில் பொதுக் குழுவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோரின் நிறைவுரைகள் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பெரும் உற்சாக டானிக் அமைந்தது. உடனடியாக சட்டமன்றத் தேர்தலுக்கான களப் பணிகளை மறுநாளே தொடங்குவது என்ற உற்சாகத்துடன் அவர்கள் கலைந்துச் சென்றனர். 


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு 29.01.2011 அன்று தாம்பரத்தில் கூடியது. தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்தும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


                                                   பொதுக்குழு தீர்மானங்கள்                                      

தீர்மானம் 1 : ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றுக


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், முஸ்லிம்களுக்கு கேரளாவிலும், கர்நாடகாவிலும் வழங்கப்பட்டது போல தேசிய அளவில் கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜேந்தர் சச்சார் உயர்நிலைக் குழுவும், அதைத் தொடர்ந்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் அமைக்கப்பட்டன. ராஜேந்தர் சச்சார் குழு, இந்திய முஸ்-லிம்களின் அவல நிலையைத் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது. மிகவும் ஒடுக்கப்பட்டுள்ள தலி-த் சமூகத்தை விடவும் மோசமான பின்னடைவில் இந்திய முஸ்லிம்கள் இருப்பதற்கு ராஜிந்தர் சச்சார் அறிக்கை கூறியுள்ளது.

இதற்குப் பரிகாரம் காணும் தீர்வுகளை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் தந்தன. தேசிய அளவில் சிறுபான்மையினருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு, அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் முடிந்த பிறகும் அவற்றை நிறைவேற்றாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலந்தாழ்த்திக் கொண்டிருப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு வலி-யுறுத்துகிறது.

தீர்மானம் 2 : தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு & வெள்ளை அறிக்கை வேண்டும்

முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமுமுக நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக தமிழக அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை வழங்கியது. முஸ்லிம்களின் பிற்பட்ட நிலையை உயர்த்த 3.5 சதவீதம் போதுமானதல்ல என்றாலும், அதை ஒரு துவக்கமாகக் கருதி தமுமுக வரவேற்றது. நன்றி தெரிவித்தது. அதேநேரம் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல், பல்வேறு குளறுபடிகள் செய்யப்பட்டன. இதை அரசின் கவனத்திற்கு தமுமுக எடுத்துச் சென்றது. குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்த பிறகும் குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை. 4.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதை தமிழக அரசு தன் சாதனையாகக் கூறுகிறது. இதில் முஸ்லிம்கள் 3.5 சதவீதம் இடம்பெறவில்லை என்பது வேதனையான உண்மை. தனி இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இந்த 3.5 சதவீத இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப் படுகின்றது என்பதை கவனிக்க கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கோருகின்றது.

தீர்மானம் 3 ; குண்டுவெடிப்பு சதிகாரர்களைக் கைது செய்க

நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்புகளுக்கு சுவாமி அசிமானந்தா போன்ற சங்-&பயங்கரவாதிகள் தான் காரணம் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஸ்ரீகாந்த் புரோகித் போன்றவர்களுக்கெல்லாம் குண்டுவெடிப்புகளில் பங்குள்ளது நிரூபணமாகியுள்ளது. இவரைத் தவிர மேலும் பல பணியாற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு குண்டுவெடிப்பில் பங்குள்ளதும் அம்பலமாகியுள்ளது. எனவே மத்திய அரசு இன்னும் ஆழமான விசாரணை மேற்கொண்டு இந்த பயங்கரவாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், சங்பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு கோருகின்றது.

தீர்மானம் 4: மனித உரிமைப் போராளியை விடுதலை செய்க

சமூகச சேவையாளர், மனித உரிமை ஆர்வலர், உலகப் புகழ்பெற்ற மருத்துவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்குரிய டாக்டர் பினாயக் சென்னுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்ற காரணம் கூறி மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள ஆயுள் தண்டனையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தீர்ப்பு உலகளாவிய அளவில் அறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே இந்திய நீதித்துறையின் மதிப்பை சிதைத்துள்ளதையும் இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.

டாக்டர் பினாயக் சென்-ஐ விடுவிக்க மத்திய அரசு உடனே ஆவன செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: தீஸ்தாவுக்கு பாராட்டு
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையையும், சங்பரிவாரத்தின் மனிதகுல விரோத அராஜகங்களையும் அம்பலப்படுத்தியதோடு, அவற்றை ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவின் கவனத்திற்கும் கொண்டு சென்ற தீஸ்தா செட்டல்வாட்டை இப்பொதுக்குழு பாராட்டுகிறது. அவரது முயற்சிகளுக்கு தார்மீக ஆதரவையும் தெரிவிக்கிறது. அதேநேரம், தீஸ்தாவின் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6 : சிறைவாசிகள் விடுதலை

விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் கைதிகளுக்கு, பொது மன்னிப்பு வழங்கி முன்னதாக விடுதலை செய்வதில் தமிழக அரசு நேர்மையைக் கடை பிடிக்கவில்லை என இப்பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளை வேண்டுமென்றே இந்த அரசு புறக்கணித்து வந்துள்ளது. பல்£ண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் நன்னடத்தை உடையோருக்கு, உடனடியாகப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்திட தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 7 : பூரண மதுவிலக்கு தேவை

தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளால், மது அடிமைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குடிகாரர்களின் சராசரி வயது 13 என்ற அதிர்ச்சி செய்தி நிலைமையின் விபரீதத்தை உணர்த்துகிறது. சமூக விரோத சாராய வியாபாரத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8 : வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சம்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கையாகும். தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாரியம் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. கேரளாவில் இருப்பது போல் தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகத்தை தொடங்க வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9 : உருதுமொழிக்கு உத்திரவாதம்

சமச்சீர் கல்வித்திட்டத்தில் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்கள், மொழிப்பாடமாக உருதுவைக் கற்கும் வாய்ப்புப் பறிக்கப்பட்டது. இது சரி செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதியும் காற்றில் பறந்து விட்டது. நடைமுறையில் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உருதுவை மொழிப்பாடமாகப் படிக்க முடியாத சூழலே உள்ளது.

மாநில மொழியான தமிழை ஒரு பாடமாகக் கற்க உருது பேசும் மக்கள் தயாராக உள்ளபோது, தாய்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கற்கும் வாய்ப்பைப் பறிப்பது நியாயமற்றது. உருதுவை மொழிப்பாடமாகக் கற்பதில் தமிழக அரசு ஏற்படுத்திய தடைகளை அகற்ற வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 10: இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை
கிழக்கு தாம்பரம் ரயில்வே காலணியில் 75 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் 'கிரைஸ்ட் தி கிங்' பள்ளிகூடத்தின் இடத்தை ரயில்வே நிர்வாகம் கையப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

-------------------------------------------------------------------------------------

                                                    புகைப்படங்கள்


































































بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்......‏

குறை கண்டத்தில்
கரை கண்டவனாக!
வரிகளில் வலி உண்டு ; வழி இல்லை!

அனைத்திற்கும் பெயரோ
இஸ்லாமிய இயக்கம் - வார்த்தையில் மட்டும்தான்;
வாழ்க்கையில் இல்லை!

வெறிப் பிடித்த எதிரிகளின் நடுவே
சகோதரனின் கறி சுவைப்பதில் எத்துனை இன்பம்!

வைகறையில் காணமுடியவில்லை விடியலை;
உணர்வு இருந்தும் மக்களுக்கு உரிமை இல்லை - காரணம்
ஒற்றுமை இல்லை!

உம்மத்துக்கள் அனைவரும் ஒரு வரிசையில்
தொழுகையில் மட்டும்! - பிரிது நேரங்களில்
தொலைவினில் மட்டும்!

அனைத்து அமைப்பினருக்கும் விமர்சினம் உண்டு ;
மறந்துவிட்டோமா
மறுமையில் நமக்கு விசாரணை உண்டு!!

அறிவிக்கவில்லையா அண்ணல் நபி
உன் மேனியின் ஒரு பகுதி சதை உன் சகோதரன் என்று?
மறக்கவில்லை மறக்கவில்லை
சதையினை கடிப்பதற்கு மட்டும் நாம்!

ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிதான் பிடித்துள்ளோம்
ஆனால்
ஆளுக்கு ஒரு முனையை!!

கிடப்பில் போடுங்கள் காழ்ப்புணர்ச்சியை ;
இனி இந்த சமுதாயம் காணட்டும்
புது எழுச்சியை!!!

--யாசர் அராபத்--